காதலன் கோரிய சீதனத்தால் வாழ்வை முடித்துக்கொண்ட இளம் ஆசிரியை? - Tamil News tamildiscovery Jaffna news Yarl news
Headlines News :
Home » » காதலன் கோரிய சீதனத்தால் வாழ்வை முடித்துக்கொண்ட இளம் ஆசிரியை?

காதலன் கோரிய சீதனத்தால் வாழ்வை முடித்துக்கொண்ட இளம் ஆசிரியை?

Written By NIsha on Wednesday, July 24, 2013 | 10:44 AM

பன்னிரெண்டு வருட காதலன் திருமணம் செய்ய சீதனம் கோரியதால் இளம் விஞ்ஞான பட்டதாரியான ஆசிரியை தற்கொலை செய்து கொண்டுள்ளார்!

கனகபுரம் கிளிநொச்சியினை சொந்த இடமாகக்கொண்டவரான செல்வி. சர்மினி கதிர்காமு(வயது 28) என்பவரே தற்கொலை செய்த நிலையினில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவர் வவுனியா இரம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலய ஆசிரியையென கூறப்படுகின்றது.

இவரை கடந்த 12 வருடமாக காதலித்து வந்த இளைஞன் திருமணம் செய்வதற்கு சீதனம் கோரியதாக கூறப்படுகின்றது. அதையடுத்து மனமுடைந்த யுவதி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சம்பவத்தையடுத்து குறித்த இளைஞன் தலைமறைவாகியிருப்பதாகவும் பொலிஸார் தேடி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : | |
Proudly powered by Kesavan
Copyright © 2014. Tamil News tamildiscovery Jaffna news Yarl news - All Rights Reserved
Original Design by Tamilcinema4u@hotmail.com