உத்தரகாண்ட்டுக்கு நிவாரணப் பொருட்களுடன் சென்ற ஹெலிகாப்டர் விபத்து : இருவர் பலி! - Tamil News tamildiscovery Jaffna news Yarl news
Headlines News :
Home » » உத்தரகாண்ட்டுக்கு நிவாரணப் பொருட்களுடன் சென்ற ஹெலிகாப்டர் விபத்து : இருவர் பலி!

உத்தரகாண்ட்டுக்கு நிவாரணப் பொருட்களுடன் சென்ற ஹெலிகாப்டர் விபத்து : இருவர் பலி!

Written By NIsha on Wednesday, July 24, 2013 | 9:10 PM

இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தில், நிவாரணப் பொருட்களை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

சமீபத்தில் பெய்த மழையால் கடுமையாக பாதிக்கப்பட்ட கேதார்நாத் பள்ளத்தாக்கு பகுதிக்கு நிவாரணப் பொருட்களை ஏற்றிகொண்டு ஒரு தனியார் ஹெலிகாப்டர் நேற்று புறப்பட்டது. உத்தரகாசியில் இருந்து சென்ற இந்த ஹெலிகாப்டர் பிற்பகல் காரத் சாட்டி அருகே சென்றபோது விழுந்து நொறுங்கியது. இதில் பைலட் மற்றும் துணை பைலட் இருவரும் உயிரிழந்தனர்.

மோசமான வானிலை காரணமாக விபத்து ஏற்பட்டிருப்பதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுபற்றி தகவல் அறிந்த மீட்புக்குழுவினர் தனி ஹெலிகாப்டரில் விரைந்துள்ளனர். இதேபோல் கடந்த மாதம் மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த இராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதில் 20 பேர் பலியாமை குறிப்பிடத்தக்கது.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : | |
Proudly powered by Kesavan
Copyright © 2014. Tamil News tamildiscovery Jaffna news Yarl news - All Rights Reserved
Original Design by Tamilcinema4u@hotmail.com