முதலாளி வீட்டில் திருடிவிட்டு: முதலாளிக்கே பிரண்ட் ரிக்வெஸ்ட், வசமாக சிக்கிய திருடன்! - Tamil News tamildiscovery Jaffna news Yarl news
Headlines News :
Home » » முதலாளி வீட்டில் திருடிவிட்டு: முதலாளிக்கே பிரண்ட் ரிக்வெஸ்ட், வசமாக சிக்கிய திருடன்!

முதலாளி வீட்டில் திருடிவிட்டு: முதலாளிக்கே பிரண்ட் ரிக்வெஸ்ட், வசமாக சிக்கிய திருடன்!

Written By NIsha on Monday, August 5, 2013 | 7:34 AM

இந்தியாவின் மும்பையில் முதலாளியின் வீட்டில் திருடிவிட்டு, அவருக்கே பேஸ்புக்கில் பிரண்ட் ரிக்வெஸ்ட் அனுப்பிய பணியாள் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்

மும்பையை சேர்ந்தவர் சுவப்ரதா, 25 வயதான இவர் கடந்த ஏப்ரல் மாதம் தான் வேலை செய்துக்கொண்டிருந்த முதலாளியின் வீட்டிலிருந்து சுமார் 25 இலட்சம் மதிப்பிலான பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்துவிட்டு 4 மாதங்களாக தலைமறைவாக இருந்து வந்தார்.

இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் புகார் அளிக்கப்பட்டதன் பேரில், பொலிசார் தீவிரமாக சுவப்ரதாவை தேடிவந்தனர். இந்நிலையில் பொலிசாருக்கு அதிக சிரமம் அளிக்காத சுவப்ரதா, தனது முதலாளிக்கு பேஸ்புக்கில் பிரண்ட் ரிக்வெஸ்ட் (Friend Request) அனுப்பியுள்ளார்.

அவர்களுக்கு தன்னை அடையாளம் தெரியவேண்டுமென்பதற்காக தனது புகைப்படத்தையும் அதில் வெளியிட்டுள்ளார்.

இதனை கண்டு சுதாரித்துக்கொண்ட பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக பொலிசில் தகவல் அளித்தனர். இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட பொலிசார் மும்பையிலிருந்து திருட்டு பொருட்களுடன் தப்பி சென்ற சுவப்ரதாவை கொல்கத்தாவில் கைது செய்தனர்.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : | |
Proudly powered by Kesavan
Copyright © 2014. Tamil News tamildiscovery Jaffna news Yarl news - All Rights Reserved
Original Design by Tamilcinema4u@hotmail.com