73 சிறை கைதிகளுக்கு மியன்மாரில் பொது மன்னிப்பு! - Tamil News tamildiscovery Jaffna news Yarl news
Headlines News :
Home » » 73 சிறை கைதிகளுக்கு மியன்மாரில் பொது மன்னிப்பு!

73 சிறை கைதிகளுக்கு மியன்மாரில் பொது மன்னிப்பு!

Written By NIsha on Wednesday, July 24, 2013 | 9:31 PM

68 அரசியல் கைதிகள் உள்பட 73 சிறை கைதிகள் மியன்மாரில் பொது மன்னிப்பு வழங்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

மியான்மரில் பல கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் சுமார் 200 பேர் ரோஹிங்யா கலவரம் தொடர்பாக கைது செய்யப்பட்டு கடந்த 3 ஆண்டுகளாக சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் தொடர்ந்து போராடி வருகின்றனர். மியான்மர் ஜனாதிபதி தெய்ன் செய்ன் சென்ற வாரம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூனை கடந்த 15ம் திகதி அவர் சந்தித்து பேசினார். அதன் பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த தெய்ன் செய்ன், 'இந்த ஆண்டின் இறுதிக்குள் மியான்மர் சிறையில் இருக்கும் அரசியல் கைதிகள் அனைவரும் விடுதலை செய்யப்படுவார்கள். அரசியல் கைதிகளாக யாரும் சிறையில் இருக்க மாட்டார்கள்' என்று அறிவித்தார்.

இதனையடுத்து, 68 அரசியல் கைதிகள் உள்பட 73 சிறை கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கி மியான்மர் அரசு விடுதலை செய்துள்ளது.

கடந்த மே மாதமும் இதே போல் 23 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.

ஜுண்டாக்கள் தலைமையிலான இராணுவ ஆட்சி முடிவுக்கு வந்த 2011ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களாட்சி அமைந்த பிறகு இதுவரை 29 ஆயிரத்து 764 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.




Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : | |
Proudly powered by Kesavan
Copyright © 2014. Tamil News tamildiscovery Jaffna news Yarl news - All Rights Reserved
Original Design by Tamilcinema4u@hotmail.com