மட்டு. குற்றச் செயல்கள் மற்றும் கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பில் புலனாய்வு பிரிவினர் விசாரணை! - Tamil News tamildiscovery Jaffna news Yarl news
Headlines News :
Home » » மட்டு. குற்றச் செயல்கள் மற்றும் கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பில் புலனாய்வு பிரிவினர் விசாரணை!

மட்டு. குற்றச் செயல்கள் மற்றும் கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பில் புலனாய்வு பிரிவினர் விசாரணை!

Written By NIsha on Wednesday, July 24, 2013 | 9:18 AM

கடந்த காலங்களில் இடம்பெற்று வந்த குற்றச் செயல்கள் கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பில் தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தின் நாலாபக்கமும் இலங்கை குற்றப் புலனாய்வுப் பிரிவு பொதுமக்களிடமும் அரச அதிகாரிகளிடமும் துருவித் துருவி விசாரணைகளை மேற்கொண்டு வரகின்றது.

கடந்த யுத்தகாலத்தின் பின்னர் மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைப் பகுதி இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் அமைந்திருந்தது. அப்போது அப்பகுதியில் பல பெண்கள் துஸ்பிரயோகங்களும் அடாவடித்தனங்களும் "இனந்தெரியாத நபர்கள்" என்று குறிப்பிடப் படுபவர்களால் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

இவைகள் இடம்பெற்று தற்போது பல வருடங்கள் ஆகியுள்ளது.

இந்நிலையில் தற்போது இலங்கை இராணுவத்தின் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கிராமங்கள் தோறும் சென்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இதனால் குறித்த பகுதியில் உள்ள மக்களிடையே ஒருவித மனக்கிலேசம் ஏற்பட்டுள்ளதோடு அச்ச உணர்வும் அம்மக்களிடையே காணப்படுகின்றது.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : | |
Proudly powered by Kesavan
Copyright © 2014. Tamil News tamildiscovery Jaffna news Yarl news - All Rights Reserved
Original Design by Tamilcinema4u@hotmail.com