24 வயது இளைஞன் இரயில் மோதி பலி! - Tamil News tamildiscovery Jaffna news Yarl news
Headlines News :
Home » » 24 வயது இளைஞன் இரயில் மோதி பலி!

24 வயது இளைஞன் இரயில் மோதி பலி!

Written By NIsha on Friday, July 26, 2013 | 3:15 AM

பம்பலப்பிட்டி ரயில் நிலையத்திற்கு அருகில் ரயிலில் மோதுண்டு 24 வயதுடைய இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மருதானையிலிருந்து அளுத்கம நோக்கி நேற்று (25) மாலை 6.55க்கு பயணித்த ரயிலில் மோதுண்டே இவ் இளைஞன் உயிரிழந்துள்ளார்.

ரயிலில் மோதுண்டு படுகாயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லும் வழியில் இவர் உயிரிழந்துள்ளார்.

இளைஞனது சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பம்பலப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : | |
Proudly powered by Kesavan
Copyright © 2014. Tamil News tamildiscovery Jaffna news Yarl news - All Rights Reserved
Original Design by Tamilcinema4u@hotmail.com