ஸ்பெயின் கோர விபத்தில் உயிரிழப்பு 78ஆக உயர்வு! - Tamil News tamildiscovery Jaffna news Yarl news
Headlines News :
Home » » ஸ்பெயின் கோர விபத்தில் உயிரிழப்பு 78ஆக உயர்வு!

ஸ்பெயின் கோர விபத்தில் உயிரிழப்பு 78ஆக உயர்வு!

Written By NIsha on Thursday, July 25, 2013 | 11:55 PM

ஸ்பெயின் நாட்டில் இடம்பெற்ற ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 78 பேராகவும் காணமடைந்தவர்கள் எண்ணிக்கை 111 பேராகவும் உயர்வடைந்துள்ளது.

ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் நகரிலிருந்து, பெரோல் என்ற இடத்துக்கு 218 பயணிகளுடன் நேற்று ஒரு ரயில் சென்று கொண்டிருந்தது.

சான்டியாகோ டி காம்போஸ்டெல்லா பகுதியில், ஒரு வளைவில் வேகமாக சென்ற இந்த ரயிலின் பெட்டிகள், தடம் புரண்டு சிதறின.

இந்த விபத்தில், 78 பேர் பலியாயினர். 111 பேர் படுகாயமடைந்தனர்.

விபத்து நடந்த பகுதியை, ஸ்பெயின் பிரதமர் மரியானோ ரஜாய் நேரில் பார்வையிட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

தொடர்புடைய செய்தி

Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : | |
Proudly powered by Kesavan
Copyright © 2014. Tamil News tamildiscovery Jaffna news Yarl news - All Rights Reserved
Original Design by Tamilcinema4u@hotmail.com