புற்றுநோயால் சோகத்தில் வாடும் சிறுவனுக்காக மொட்டை போட்ட ஜோர்ஜ் எச்.டபிள்யு. புஷ்! - Tamil News tamildiscovery Jaffna news Yarl news
Headlines News :
Home » » புற்றுநோயால் சோகத்தில் வாடும் சிறுவனுக்காக மொட்டை போட்ட ஜோர்ஜ் எச்.டபிள்யு. புஷ்!

புற்றுநோயால் சோகத்தில் வாடும் சிறுவனுக்காக மொட்டை போட்ட ஜோர்ஜ் எச்.டபிள்யு. புஷ்!

Written By NIsha on Thursday, July 25, 2013 | 6:20 AM

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு ஆதரவுக்கு அளிக்கும் விதமாக அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் எச்.டபிள்யு. புஷ் மொட்டை அடித்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இரகசிய உளவு அமைப்பை சேர்ந்த அதிகாரி ஒருவரின் 2 வயது மகன், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறான். சிகிச்சையின் காரணமாக சிறுவனின் தலை முடி கொட்டி வருகிறது. இதனால் சிறுவன் வருத்தப்பட்டு சோகத்தில் ஆழ்ந்தான்.

சிறுவனின் சோகத்தைப் போக்க ஜோர்ஜ். டபிள்யூ புஷ் தானும் மொட்டையடித்துக் கொண்டார்.

இதற்கு காரணம் 60 ஆண்டுகளுக்கு முன்னர் புஷ்சின் 4 வயது குழந்தை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததுதானாம்.



Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : | |
Proudly powered by Kesavan
Copyright © 2014. Tamil News tamildiscovery Jaffna news Yarl news - All Rights Reserved
Original Design by Tamilcinema4u@hotmail.com