வல்லுறவுக் குற்றவாளிகளுக்கு வக்கீல்கள் அடி, உதை: நீதிமன்றதில் பரபரப்பு! - Tamil News tamildiscovery Jaffna news Yarl news
Headlines News :
Home » » வல்லுறவுக் குற்றவாளிகளுக்கு வக்கீல்கள் அடி, உதை: நீதிமன்றதில் பரபரப்பு!

வல்லுறவுக் குற்றவாளிகளுக்கு வக்கீல்கள் அடி, உதை: நீதிமன்றதில் பரபரப்பு!

Written By NIsha on Thursday, July 25, 2013 | 5:53 AM

இந்தியாவின், உத்தர பிரதேச மாநிலம் மீரட்டில் கடந்த சனிக்கிழமை அன்று பிளஸ் 2 மாணவி ஒருவரை, நான்கு பேர் கொண்ட ஒரு கும்பல் கடத்திச் சென்று, ஓடும் காருக்குள் அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

அத்துடன் மறுநாள் அந்த பெண்ணின் வீட்டிற்குச் சென்ற அந்த நபர்கள், பொலிசில் சொன்னால் கொலை செய்துவிடுவதாக மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதுதொடர்பாக பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், பேஸ்புக் மூலம் அந்த பெண்ணுக்கு பழக்கமான நண்பர் மற்றும் 3 பேர் சேர்ந்து இந்த செயலில் ஈடுபட்டமை தெரியவந்தது. இதையடுத்த பேஸ்புக் நண்பர் ஷோபித் குர்ஜார், அமித் பாதனா, அவரது கார் சாரதி ஆசாத் சிங் குஜ்ஜார் ஆகிய 3 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர்.

4-வது குற்றவாளி தொடர்ந்து தலைமறைவாக உள்ளார். கைது செய்யப்பட்ட 3 பேரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

அவர்களை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவர்களை பொலிசார் நீதிமன்ற அறையில் இருந்து வெளியே கொண்டு வந்தனர். அப்போது அவர்களை வழக்கறிஞர்களும் பொதுமக்களும் சூழ்ந்து கொண்டு கடுமையாகத் திட்டினர். இத்தகைய கொடுமை செய்த நபர்களை தூக்கில் தொடங்க விட வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

ஒரு கட்டத்தில் அவர்களை வழக்கறிஞர்கள் கோபத்தில் தாக்கினர். நிலைமை விபரீதமாவதை உணர்ந்த பொலிசார், குற்றவாளிகளை அவசரம் அவசரமாக வெளியே கொண்டு சென்று வாகனத்தில் ஏற்றி சிறைச்சாலைக்கு கொண்டு சென்றனர்.

இதனால் நீதிமன்ற வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. குற்றவாளிகளுக்கு பெரிய அளவில் காயம் ஏற்படவில்லை என்று பொலிசார் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : | |
Proudly powered by Kesavan
Copyright © 2014. Tamil News tamildiscovery Jaffna news Yarl news - All Rights Reserved
Original Design by Tamilcinema4u@hotmail.com