ஜயசேகரவின் கட்சி தாவலும், நிரவாண பந்தயமும்! - Tamil News tamildiscovery Jaffna news Yarl news
Headlines News :
Home » » ஜயசேகரவின் கட்சி தாவலும், நிரவாண பந்தயமும்!

ஜயசேகரவின் கட்சி தாவலும், நிரவாண பந்தயமும்!

Written By NIsha on Thursday, July 25, 2013 | 12:31 AM

தயாசிறி ஜயசேகர அரசாங்கத்தில் இணைவாரா இல்லையா என இருவருக்கு இடையில் பந்தயம் கட்டப்பட்டு அதில் சம்பந்தப்பட்ட ஒருவர் பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் அவிசாவளை - தெரணியகலயில் இடம்பெற்றுள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது, தயாசிறி ஜயசேகர அரசாங்கத்தில் இணைந்து கொள்ளவுள்ளதாக ஊடகங்களில் தகவல் பரவியதை அடுத்து தெரணியகலயில் இரு நண்பர்கள் பந்தயம் கட்டியுள்ளனர்.

தயாசிறி அரசாங்கத்தில் இணைந்தால் நிர்வாணமாக தெரணியகல நகரில் திரிவேன் என ஒரு நண்பர் பந்தயம் கட்டியுள்ளார்.

அதன்படி, நேற்றைய தினம் தயாசிறி ஜயசேகர அரசாங்கத்தில் இணைந்து கொண்டார். இந்நிலையில் பந்தயம் கட்டிய நபர் (தற்போது கொழும்பில் உள்ளார்) நிர்வாணமாக திரிவேன் என்று கூறிய நண்பருக்கு தொலைபேசி அழைப்பெடுத்து பந்தயத்தை நிறைவேற்றுவாயா என கேட்டுள்ளார்.

அதற்கு குறித்த நண்பர் நிறைவேற்றுவேன் என்று கூறியுள்ளார்.

இந்த தகவல் இன்று (25) காலை தெரணியகல நகர் முழுதும் பரவியதை அடுத்து அது குறித்து அனைவரும் முணுமுணுத்தனர். இந்தத் தகவல் எப்படியோ தெரணியகல பொலிஸ் நிலையத்திற்கு தெரியவந்தது. சம்பந்தப்பட்ட நபர் பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டார்.

அதன்போது தான் பந்தயம் கட்டியது உண்மைதான் ஆனால் நிர்வாணமாக தெரணியகல நகரத்தில் திரிய மாட்டேன் என வாக்குறுதி அளித்ததை தொடர்ந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : | |
Proudly powered by Kesavan
Copyright © 2014. Tamil News tamildiscovery Jaffna news Yarl news - All Rights Reserved
Original Design by Tamilcinema4u@hotmail.com