10 வயதுச் சிறுவனிடம் துப்பாக்கி முனையில் கொள்ளையிட்ட 12 வயது சிறுவன்! - Tamil News tamildiscovery Jaffna news Yarl news
Headlines News :
Home » » 10 வயதுச் சிறுவனிடம் துப்பாக்கி முனையில் கொள்ளையிட்ட 12 வயது சிறுவன்!

10 வயதுச் சிறுவனிடம் துப்பாக்கி முனையில் கொள்ளையிட்ட 12 வயது சிறுவன்!

Written By NIsha on Friday, August 2, 2013 | 8:28 AM

அமெரிக்காவில் துப்பாக்கியை காட்டி ஒரு சிறுவன் பணத்தை கொள்ளையடித்துள்ளான்.

அமெரிக்காவில் பென்சில் லேனியாவில் உள்ள ஜர்னஸ் டவுன் பகுதியை சேர்ந்த 10 வயது சிறுவன் எலுமிச்சம் பழ ஜூஸ் குடிக்க தனது நண்பர்களுடன் கடைக்கு சென்று கொண்டிருந்தான்.

அப்போது அவனை சுமார் 12 வயது மதிக்கதக்க மற்றொரு சிறுவன் வழி மறித்தான். அவனிடம் இருந்த பணத்தை பறிக்க முயன்றான். அதற்கு அவன் மறுத்தான். உடனே 12 வயது சிறுவன் தான் வைத்திருந்த கைத்துப்பாக்கியை காட்டி அவனை சுட்டு கொன்று விடுவதாக மிரட்டினான். பின்னர், அவனிடம் இருந்த 1800 ரூபாயை பறித்துக் கொண்டு தனது வீட்டுக்கு ஓடிவிட்டான். பணத்தை பறி கொடுத்த சிறுவன் இதுகுறித்து அப்பகுதியில் ரோந்து வந்த போலீசாரிடம் தெரிவித்தான்.

உடனே அச்சிறுவனின் வீட்டிற்கு சென்ற போலீசார் அவனை கைது செய்தனர். அவனிடம் இருந்து கைத்துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது.

பின்னர் அவன் கைது செய்யப்பட்டான். குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவன் சிறுவர் சீர்திருத்த சிறையில் அடைக்கப்படுவான் என போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : | |
Proudly powered by Kesavan
Copyright © 2014. Tamil News tamildiscovery Jaffna news Yarl news - All Rights Reserved
Original Design by Tamilcinema4u@hotmail.com