சிறுமியை வல்லுறவு புரிந்த பதின்ம வயது சிறுவர்கள்: அதிர்ச்சி சம்பவம்! - Tamil News tamildiscovery Jaffna news Yarl news
Headlines News :
Home » » சிறுமியை வல்லுறவு புரிந்த பதின்ம வயது சிறுவர்கள்: அதிர்ச்சி சம்பவம்!

சிறுமியை வல்லுறவு புரிந்த பதின்ம வயது சிறுவர்கள்: அதிர்ச்சி சம்பவம்!

Written By NIsha on Tuesday, September 17, 2013 | 9:20 AM

அஸ்ஸாமின் குவஹாத்தி நகரில் மைனர் சிறுமி ஒருவரை ஐந்து பேர் கொண்ட கும்பல் கொடூரமாக பலாத்காரம் செய்துள்ளது.

இந்த ஐந்து பேரும் 16 வயதுக்குட்பட்ட சிறார்கள் என்பது அதிர்ச்சி தருவதாக உள்ளது.

சிறுமி தனது வீட்டுக்கு அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது அருகே அழைத்துச் சென்று நாசப்படுத்தியுள்ளனர்.

குற்றம் இழைத்த ஐந்து பேருக்கும் 15 முதல் 16 வயதுதான் ஆகிறதாம்.

அந்த சிறுமிக்கு மயக்க மருந்து கொடுத்து அருகில் உள்ள மறைவான இடத்திற்குக் கூட்டிச் சென்று ஐந்து பேரும் மாலை தொடங்கி இரவு முழுவதும் அட்டூழியம் செய்துள்ளனர்.

அடுத்த நாள் காலையில்தான் சிறுமி கண்டெடுக்கப்பட்டாள். காயமடைந்த நிலையில் கிடந்த சிறுமியை பெற்றோரும் அக்கம் பக்கத்தினரும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

இந்த குற்றத்தை செய்த சிறுவர்களை பொலிசார் கைது செய்துள்ளனர். அவர்களுக்கு வயதை நிர்ணயிக்கும் எலும்பு மஜ்ஜை சோதனைக்கு பொலிசார் முடிவு செய்துள்ளனர்.

இப்போது இந்த ஐந்து சிறார்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டாலும் கூட அவர்களுக்கு அதிகபட்சம் 3 வருட கால சிறார் சீர்திருத்த முகாமில் அடைக்கப்படும் தண்டனைதான் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : | |
Proudly powered by Kesavan
Copyright © 2014. Tamil News tamildiscovery Jaffna news Yarl news - All Rights Reserved
Original Design by Tamilcinema4u@hotmail.com