என்னை திருமணம் செய்து கொள்வதால் உங்களுக்கு மகிழ்ச்சி கிடைக்குமா? 11 வயது சிறுமி கேள்வி! - Tamil News tamildiscovery Jaffna news Yarl news
Headlines News :
Home » » என்னை திருமணம் செய்து கொள்வதால் உங்களுக்கு மகிழ்ச்சி கிடைக்குமா? 11 வயது சிறுமி கேள்வி!

என்னை திருமணம் செய்து கொள்வதால் உங்களுக்கு மகிழ்ச்சி கிடைக்குமா? 11 வயது சிறுமி கேள்வி!

Written By NIsha on Saturday, August 3, 2013 | 12:06 PM

ஏமனை சேர்ந்த 11 வயது சிறுமி ஒருவர், தனது பெற்றோர்கள் பணத்துக்காக தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்துவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

ஏமனில் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் சிறுமிகளுக்கு, திருமணம் செய்து வைக்கும் பழக்கம் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் 11 வயது மதிக்கத்தக்க நடா அல் ஆடல் என்ற சிறுமி, பணத்துக்காக பெற்றோர்கள் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்துவதாக குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து யூடியூப்பில், என்னை திருமணம் செய்து கொள்வதால் உங்களுக்கு மகிழ்ச்சி கிடைக்குமா? என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் இந்த வயதில் திருமணம் செய்து கொள்வதை விட, இறப்பதே மேல் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த வீடியோ வெளியாகி உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு சிறுமிகளுக்கு திருமணம் செய்து வைப்பதால் உடலளவில் பாதிக்கப்படுவர் என மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் பெண் உரிமைளுக்கான பிரிவின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே நடா, தற்பொழுது தனது பெற்றோரை விட்டு வந்து அவளுடைய மாமாவின் வீட்டில் வசித்து வருகின்றாள்.

Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : | |
Proudly powered by Kesavan
Copyright © 2014. Tamil News tamildiscovery Jaffna news Yarl news - All Rights Reserved
Original Design by Tamilcinema4u@hotmail.com