மலேஷியாவில் 3 தமிழர்கள் உட்பட ஐவர் சுட்டுக்கொலை: 200 பேர் கைது! - Tamil News tamildiscovery Jaffna news Yarl news
Headlines News :
Home » » மலேஷியாவில் 3 தமிழர்கள் உட்பட ஐவர் சுட்டுக்கொலை: 200 பேர் கைது!

மலேஷியாவில் 3 தமிழர்கள் உட்பட ஐவர் சுட்டுக்கொலை: 200 பேர் கைது!

Written By NIsha on Monday, August 19, 2013 | 9:58 PM

குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த 3 தமிழர்கள் உட்பட ஐவர் மலேஷியப் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

மலேசியாவில் பல இடங்களில் துப்பாக்கி சூடு, கொள்ளை போன்ற குற்றச் செயல்கள் அதிகரித்து வந்ததால் குற்றவாளிகளை பிடிக்க மலேசிய பொலிசார் தீவிர வேட்டை நடத்தினார்கள். அப்போது கடுமையான குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த ஒரு கும்பலை பிடிக்க வடக்கு பினாங் மாநிலம் ஜார்ஜ் டவுன் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்றனர்.

அங்கு பதுங்கியிருந்த 5 பேரை பொலிசார் சுட்டுக் கொன்றனர். அவர்களில் 3 பேர் இந்திய வம்சாவளியினர் என்று பொலிசார் தெரிவித்தனர்.

தமிழர்களான அவர்கள் ஜெ.கோபிநாத் (வயது 31), என்.ராகன் (25), எம்.சுரேஷ் (25) என்று தெரியவந்தது. இதுதவிர நாடு முழுவதும் சந்தேகப்படும்படியான 200 பேரை கைது செய்துள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.




Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : | |
Proudly powered by Kesavan
Copyright © 2014. Tamil News tamildiscovery Jaffna news Yarl news - All Rights Reserved
Original Design by Tamilcinema4u@hotmail.com