37 பேரை பலிகொண்ட மலேசிய பேரூந்து விபத்து! 60 மீட்டர் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து! - Tamil News tamildiscovery Jaffna news Yarl news
Headlines News :
Home » » 37 பேரை பலிகொண்ட மலேசிய பேரூந்து விபத்து! 60 மீட்டர் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து!

37 பேரை பலிகொண்ட மலேசிய பேரூந்து விபத்து! 60 மீட்டர் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து!

Written By NIsha on Wednesday, August 21, 2013 | 11:48 PM

மலேசியாவில் நடந்த கோரமான சாலை விபத்தில் 37 பேர் பலியானார்கள். இவர்களில் இந்தியர்கள் இருவர் என்று கூறப்படுகிறது. ஜென்டிங் ஹைலேண்ட்ஸ் பகுதியில், இந்த விபத்து நடந்துள்ளது.

பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்ற பேருந்தானது, 60 மீட்டர் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விழுந்ததால் விபத்து நேரிட்டது. விபத்தில் சிக்கிய பேருந்தில் 53 பேர் இருந்தனர். இவர்களில் 27 ஆண்களும், 10 பெண்களும் உயிரிழந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இறந்தவர்களில் மலேசியர்கள் தவிர வங்கதேசம், தாய்லாந்து, சீன நாட்டவரும் அடக்கம். பலத்த காயமடைந்தவர்கள் செலயாங் மருத்துவமனை, கோலாலம்பூர் மருத்துவமனை, சுங்காய் புலோ மருத்துவமனை, பென்டாங் மருத்துவமனை ஆகியவற்றில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அந்த மலைப் பகுதியில் அமைந்துள்ள ரிசார்ட்டிலிருந்து திரும்பும் வழியில் பஸ் விபத்துக்குள்ளானது. இறந்தவர்களில் 30 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு விட்டன. மேலும் 7 பேரின் உடல்களை மீட்கும் முயற்சி நடந்து வருகிரது.




Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : | |
Proudly powered by Kesavan
Copyright © 2014. Tamil News tamildiscovery Jaffna news Yarl news - All Rights Reserved
Original Design by Tamilcinema4u@hotmail.com