அசாமில் 8 வருடங்களில் 13,000 பெண்கள் துஷ்பிரயோகம்: 19,902 பெண்கள் கடத்தல்! - Tamil News tamildiscovery Jaffna news Yarl news
Headlines News :
Home » » அசாமில் 8 வருடங்களில் 13,000 பெண்கள் துஷ்பிரயோகம்: 19,902 பெண்கள் கடத்தல்!

அசாமில் 8 வருடங்களில் 13,000 பெண்கள் துஷ்பிரயோகம்: 19,902 பெண்கள் கடத்தல்!

Written By NIsha on Thursday, August 1, 2013 | 4:32 AM

இந்தியாவின் அசாம் மாநிலத்தில் கடந்த எட்டு வருடங்களில் சுமார் 13,000 பெண்கள் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பாக 2005 - 2013 மே மாதம் வரை 12,857 பெண்கள் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதோடு, அவர்களில் 59 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அம் மாநில அரசின் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

மேலும் 8,181 பாலியல் பலாத்கார வழங்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ள அதேவேளை, இது தொடர்பில் 12,216 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மாநில அரசின் தகவல்கள் கூறுகின்றன. இவ்வாறான குற்றங்கள் அதிகரிக்க சனத்தொகைப் பெருக்கம், பாலினப் பாகுபாடு, குடும்ப சிக்கல்கள், வறுமை, வேலை இன்மை போன்றவையே காரணம் என கூறப்படுகின்றது. மேலும் பாலியல் துன்புறுத்தல்கள் மட்டுமல்லாது வரதட்சனை கொடுமைக்கும் இங்குள்ள பெண்கள் ஆளாக நேரிடுகிறது.

இவ்வாறாக வரதட்சனை சார்ந்த குற்றச்சாட்டுக்களில் மாத்திரம், அந்த மாநிலத்தில் 1,671 பேர் கைதாகியுள்ளனர். இதேவேளை அசாம் மாநிலத்தில் கடந்த காலங்களில் ஆயிரக்கணக்கான பெண்கள் கடத்தப்பட்டுள்ளதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் குறிப்பிடுகின்றன. பெண்கள் கடத்தப்பட்டமை தொடர்பில் 19,902 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அதில் 14,488 திருமணம் தொடர்பானவை. இவற்றில் 9,032 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 113 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் அரச தகவல்கள் குறிப்பிடுகின்றன.

இவற்றில் பெரும்பாலான கடத்தல்கள் திருமணத்திற்காகவே இடம்பெறுவதாவும், அவற்றில் சில இறுதித் தருணத்தில் சமரசம் செய்து வைக்கப்படுவதாகவும் அரச தகவல்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : | |
Proudly powered by Kesavan
Copyright © 2014. Tamil News tamildiscovery Jaffna news Yarl news - All Rights Reserved
Original Design by Tamilcinema4u@hotmail.com