உறுப்புகளை சிதைத்து தாய்-மகள் கொடூரக் கொலை: பீதியில் மக்கள்! - Tamil News tamildiscovery Jaffna news Yarl news
Headlines News :
Home » » உறுப்புகளை சிதைத்து தாய்-மகள் கொடூரக் கொலை: பீதியில் மக்கள்!

உறுப்புகளை சிதைத்து தாய்-மகள் கொடூரக் கொலை: பீதியில் மக்கள்!

Written By NIsha on Wednesday, August 21, 2013 | 11:27 AM

தமிழ்நாட்டில் மார்பு மற்றும் மர்ம உறுப்புகளை சிதைத்து தாய், மகள் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவமானது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மேலக்கால் தெற்கு தெருவை சேர்ந்தவர் வீமத்தேவர். சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவரது மனைவி செல்லம்மாள் (60).

இவர்களது மகன்கள் ராமன், முருகன். திருமணமான இருவரும் வெளியூர்களில் குடும்பத்துடன் வசிக்கின்றனர். வீமத்தேவர் மகள் முருகேஸ்வரி(37). இவர், என்.பி.கே. கோட்டையை சேர்ந்த மகேந்திரன் என்பவரை கலப்பு திருமணம் செய்தார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மகேந்திரன் இறந்து விட்டார். இவர்களது 2 மகன்கள், மகேந்திரனின் அம்மாவின் பராமரிப்பில் உள்ளனர்.

மகள் முருகேஸ்வரியுடன் மேலக்கால் தெற்கு தெருவில் வசித்த செல்லம்மாள், விவசாய கூலி வேலை செய்து வந்தார்.

இந்நிலையில் இருவரும் அவர்களது வீட்டு வாசல் முன்பு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தனர். செல்லம்மாளின் இடது மார்பு, முருகேஸ்வரியின் வலது மார்பு மற்றும் இருவரின் மர்ம உறுப்புகளும் சிதைக்கப்பட்டிருந்தன. செல்லம்மாள் தலையில் வெட்டு காயங்களும் இருந்தன. தகவலறிந்த சமயநல்லூர் டிஎஸ்பி சாந்தசொரூபன், காடுபட்டி காவல் ஆய்வாளர் கமலக்கண்ணன், எஸ்ஐ மாரிமுத்து ஆகியோர் தலைமையில் பொலிசார் சம்பவ இடத்தில் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

இந்த இரட்டை கொலையில் பீதி அடைந்த மேலக்கால் தெற்கு தெரு மக்கள் வீடுகளை பூட்டிவிட்டு வெளியில் சென்று விட்டனர். இதனால் போலீசார் விசாரணை நடத்த முடியவில்லை. உறுப்புகள் சிதைக்கப்பட்டு கொலை நடந்துள்ளதால், கள்ளக்காதல் விவகாரமாக இருக்கலாம் என்று பொலிசார் சந்தேகிக்கின்றனர். செல்லம்மாளுக்கும், பக்கத்து வீட்டை சேர்ந்த பாலு என்பவரின் மகன் முனியாண்டிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. முனியாண்டி மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இரு குடும்பத்துக்கும் இடையே உள்ள தகராறு தொடர்பாக செல்லம்மாள், முருகேஸ்வரி இருவரையும் முனியாண்டி கொலை செய்திருக்கலாம் என்றும் சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் முனியாண்டியை பொலிசார் தேடி வருகின்றனர்.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : | |
Proudly powered by Kesavan
Copyright © 2014. Tamil News tamildiscovery Jaffna news Yarl news - All Rights Reserved
Original Design by Tamilcinema4u@hotmail.com