வெள்ளவத்தை பகுதியில் விபச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்ட மூன்று பெண்கள் கைது! - Tamil News tamildiscovery Jaffna news Yarl news
Headlines News :
Home » » வெள்ளவத்தை பகுதியில் விபச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்ட மூன்று பெண்கள் கைது!

வெள்ளவத்தை பகுதியில் விபச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்ட மூன்று பெண்கள் கைது!

Written By NIsha on Sunday, August 4, 2013 | 9:28 PM

கொழும்பு, வெள்ளவத்தை பிரதேசத்தில் ஆயுர்வேத சிகிச்சை நிலையம் என்ற பெயரில் இயங்கி வந்த விபச்சார விடுதி ஒன்று சுற்றி வளைக்கப்பட்டுள்ளது.

இதன்போது குறித்த விபச்சார விடுதியை நடத்திச் சென்ற சந்தேகநபர் ஒருவர் மற்றும் அங்கிருந்த பெண்கள் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட பெண்கள் 25,33,38 வயதானவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட நால்வரும் இன்று (05) புதுக்கடை மூன்றாம் இலக்க நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெள்ளவத்தை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : | |
Proudly powered by Kesavan
Copyright © 2014. Tamil News tamildiscovery Jaffna news Yarl news - All Rights Reserved
Original Design by Tamilcinema4u@hotmail.com