இயேசுவின் கட்டளைக்கமையவே பதவி விலகினேன்: முன்னாள் போப் திடீர் தகவல்! - Tamil News tamildiscovery Jaffna news Yarl news
Headlines News :
Home » » இயேசுவின் கட்டளைக்கமையவே பதவி விலகினேன்: முன்னாள் போப் திடீர் தகவல்!

இயேசுவின் கட்டளைக்கமையவே பதவி விலகினேன்: முன்னாள் போப் திடீர் தகவல்!

Written By NIsha on Thursday, August 22, 2013 | 4:11 AM

உலக கத்தோலிக்க மத தலைவராக போப் ஆண்டவர் உள்ளார். இதற்கு முன்பு போப் ஆண்டவராக இருந்த பென டிக் கடந்த பெப்ரவரி மாதம் திடீரென தனது பதவியை இராஜினாமா செய்தார்.

தனது உடல்நிலையும், மனநிலையும் ஒத்துழைப்பு தராததால் என்னால் போப் ஆண்டவர் பணியை தொடரமுடியவில்லை. எனவே இராஜினாமா செய்கிறேன் என்று அப்போது அவர் கூறினார்.

இந்த நிலையில் பெனடிக்ட் தற்போது வேறு ஒரு தகவலை வெளியிட்டுள்ளார். நான் தனிப்பட்ட முறையில் கடவுளிடம் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தேன். அப்போது கடவுள் இயேசு எனக்கு கட்டளை பிறப்பித்தார்.

என்னை பதவி விலகும் படி அவர் கேட்டுக் கொண்டார். கடவுளின் விருப்பத்திற்கு இணங்க நான் பதவி விலகினேன். எனது பதவி விலகல் கடவுள் எடுத்த முடிவு என்று கூறியுள்ளார்.

இந்த தகவலை இத்தாலிய கத்தோலிக்க மத செய்தி நிறுவனமான `செனித்´ வெளியிட்டுள்ளது.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : | |
Proudly powered by Kesavan
Copyright © 2014. Tamil News tamildiscovery Jaffna news Yarl news - All Rights Reserved
Original Design by Tamilcinema4u@hotmail.com