இலங்கை வழியாக ராமேஸ்வரத்துக்குள் பயங்கரவாதிகள் ஊடுருவல்? - Tamil News tamildiscovery Jaffna news Yarl news
Headlines News :
Home » » இலங்கை வழியாக ராமேஸ்வரத்துக்குள் பயங்கரவாதிகள் ஊடுருவல்?

இலங்கை வழியாக ராமேஸ்வரத்துக்குள் பயங்கரவாதிகள் ஊடுருவல்?

Written By NIsha on Thursday, August 22, 2013 | 9:53 PM

இலங்கையில் இருந்து, கடல் வழியாக பயங்கரவாதிகள், ராமேஸ்வரத்தில் ஊடுருவி உள்ளனரா என நள்ளிரவில் அனைத்து விடுதிகளிலும் பொலிசார் திடீர் சோதனை நடத்தினர்.

காஷ்மீர் எல்லைப் பகுதியில், இந்தியாவிற்குள் ஊடுருவ நினைத்த, பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் செயலை, இந்திய ராணுவத்தினர் முறியடித்து, தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.

இதனால் பயங்கரவாதிகள், வங்கக் கடல் வழியாக, இலங்கையில் இருந்து, தமிழகத்திற்குள் ஊடுருவி, முக்கியக் கோவில், பொது இடங்களில் அசம்பாவிதம் ஏற்படுத்தத் திட்டமிட்டு உள்ளதாக, மத்திய, மாநில உளவுத் துறைக்குத் தகவல் வந்தது.

இதையடுத்து, ராமேஸ்வரம் கோவிலில், கூடுதல் பொலிசார், பாதுகாப்புப் பணியில் உள்ளனர். இந்த நிலையில், நேற்று முன்தினம், இலங்கையில் இருந்து கடல் வழியாக, பயங்கரவாதிகள் தமிழகக் கடலோரப் பகுதியில் ஊடுருவியதாக, உளவுத் துறைக்குத் தகவல் வந்தவுடன், ராமேஸ்வரத்தில், அன்று நள்ளிரவு, 1:30 மணியளவில், டி.எஸ்.பி., தலைமையில் பொலிசார், அனைத்து லாட்ஜிலும், தங்கியவர் விவரத்தைக் கேட்டு, ஒவ்வொரு அறையிலும் விசாரித்தனர்.

நேற்று காலை, மீன் பிடித்து கரை திரும்பிய நாட்டுப்படகு, விசைப்படகு மீனவர் அடையாள அட்டை, படகு ஆர்.சி.புக்கை, மண்டபம் கடலோரப் பாதுகாப்பு பொலிசார் சோதனையிட்டனர்.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : | |
Proudly powered by Kesavan
Copyright © 2014. Tamil News tamildiscovery Jaffna news Yarl news - All Rights Reserved
Original Design by Tamilcinema4u@hotmail.com