பல்கலைக்கழக வளாகத்தில் மானபங்கப்படுத்தப்பட்ட மாணவி: மாணவியின் கதறல் கேட்டு குவிந்த மாணவர்கள்! - Tamil News tamildiscovery Jaffna news Yarl news
Headlines News :
Home » » பல்கலைக்கழக வளாகத்தில் மானபங்கப்படுத்தப்பட்ட மாணவி: மாணவியின் கதறல் கேட்டு குவிந்த மாணவர்கள்!

பல்கலைக்கழக வளாகத்தில் மானபங்கப்படுத்தப்பட்ட மாணவி: மாணவியின் கதறல் கேட்டு குவிந்த மாணவர்கள்!

Written By NIsha on Wednesday, August 7, 2013 | 3:29 AM

இந்தியாவின் டெல்லியில் பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் மானபங்கப்படுத்தப்பட்டமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் உள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் 20 வயது இளம்பெண் ஒருவர் பெண்களுக்கான பல்கலைக்கழக விடுதியில் தங்கி பயின்றுவந்தார். இவரரை கடந்த ஞாயிற்றுகிழமை அன்று சந்திக்க வந்த பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர், திடீரென அப்பெண்ணை அடித்து, தகாத முறையில் நடந்துக்கொண்டார்.

மாணவியின் கதறல் சத்தம் கேட்டு அங்கு குவிந்த பிற மாணவர்கள், முன்னாள் மாணவரை அடித்து பொலிசில் ஒப்படைத்தனர். பல்கலைக்கழக வளாகத்தில் ஒரு மாணவிக்கு ஏற்பட்ட அவலத்திற்கு கண்டனம் தெரிவித்த ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் எஸ்.கே. சொபோரி, இத்தகைய குற்றங்கள் மற்றும் இக்குற்றங்களில் ஈடுபடுபவர்களை மன்னிக்க முடியாது என்றார்.

மேலும் இக்குற்றங்களுக்கு கடும் தண்டனை அளிக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : | |
Proudly powered by Kesavan
Copyright © 2014. Tamil News tamildiscovery Jaffna news Yarl news - All Rights Reserved
Original Design by Tamilcinema4u@hotmail.com