கரையொதுங்கிய இருசடலங்களும் வெளிநாட்டவர்களுடையது: சட்ட வைத்திய அதிகாரி! - Tamil News tamildiscovery Jaffna news Yarl news
Headlines News :
Home » » கரையொதுங்கிய இருசடலங்களும் வெளிநாட்டவர்களுடையது: சட்ட வைத்திய அதிகாரி!

கரையொதுங்கிய இருசடலங்களும் வெளிநாட்டவர்களுடையது: சட்ட வைத்திய அதிகாரி!

Written By NIsha on Friday, August 2, 2013 | 3:28 AM

யாழ்ப்பாணத்தில் வேலணை மண்கும்பான் வெள்ளக்கடற்கரைப் பகுதியில் ஆண்ணொருவரதும் பெண்ணொருவரும் சடலங்கள் நேற்று கரையொதுங்கியுள்ளன.

ஏற்கனவே புங்குடுதீவு மற்றும் நெடுந்தீவு ஆகிய இடங்களில் கடற்கரையோரங்களில் இரண்டு சடலங்கள் கரையொதுங்கியிருந்த நிலையில் நேற்று இந்த இரண்டு சடலங்களும் கரையொதுங்கியுள்ளன.

இதில் கரையொதுங்கிய பெண்ணிற்கு 25 வயதிற்கும் குறைவான வயதிருக்கும் என்று அவர் சுடிதார் அணிந்திருந்தார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் பிரதேச கடற்றொழிலாளர்கள் பொலிஸாருக்கு தகவல் அனுப்பியதைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வருகைதந்த பொலிஸார் சடலங்களை மீட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்தனர்.

இதேவேளை இவ்வாறு கரையொதுங்கிய சடலங்கள் அனைத்தும் படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்களாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது.

யாழ்.தீவகப் கடற்களைப் பகுதியில் கரை ஒதுங்கிய இருசடலங்களும் வெளிநாட்டவர்களுடையது: சட்ட வைத்திய அதிகாரி.

யாழ்ப்பாணம் தீவகப் கடற்கறையோரங்களில் மனித சடலங்கள் கரைஒதுங்கியது தொடர்பில் ஊர்காவற்துறைப் பொலிஸார் தீவிரமாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். யாழ்ப்பாணத்தில் காணாமல் போனவர்களது சடலங்களா? அல்லது அவுஸ்திரேலியாவுக்கு சென்ற அகதிகள் படகு விபத்தில் சிக்கிய சடலங்களா என்ற கோணத்தில் விசாரணைகளை முடுக்கியுள்ளனர்.

உடற்குற்றுப் பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்ட சடலங்களை பிரேதப் பரிசோதனை மேற்கொண்ட சட்ட வைத்திய அதிகாரி இச் சடலங்கள் இலங்கைப் பிரஜையுடையது அல்ல என தெரிவித்துள்ளார். இலங்கை அல்லாத வெளிநாட்டவருடையதாக இருக்கலாம் என தாம் சந்தேகிப்பதாக அவர் குறிப்பிட்டுளார்.

யாழ்.தீவகப் பகுதியான வேலணை வெள்ளைக் கடற்கரையோரமாக நேற்று இரு சடலங்கள் உருக்குலைந்த நிலையில் கரையொதுங்கியிருந்தன. இவ்வாறு கரையொதுங்கிய இரு சடலங்களில் ஒன்று சுமார் 25 - 26 வயது மதிக்கத்தக்க இளம் பெண்ணினுடையதெனவும் உருக்குலைந்த சடலமானது சுடிதார் அணிந்த நிலையில் காணப்பட்டது.

இந்தச் சடலமானது வேலணை தெற்கு கல்லாண்டு முனங்கு என்று அழைக்கப்படும் கடற்பிரதேசத்தில் கரையொதுங்கியிருந்தது.

அதேவேளை புங்குடதீவிலும் அண்மையில் ஆண் ஒருவரது சடலமும் கரையொதுங்கிய நிலையில் மீட்கப்பட்டு யாழ்.போதனா சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : | |
Proudly powered by Kesavan
Copyright © 2014. Tamil News tamildiscovery Jaffna news Yarl news - All Rights Reserved
Original Design by Tamilcinema4u@hotmail.com