இரயிலின் முன் பாய்ந்து இளைஞன் தற்கொலை. - Tamil News tamildiscovery Jaffna news Yarl news
Headlines News :
Home » » இரயிலின் முன் பாய்ந்து இளைஞன் தற்கொலை.

இரயிலின் முன் பாய்ந்து இளைஞன் தற்கொலை.

Written By NIsha on Saturday, August 3, 2013 | 9:47 PM

கொச்சிக்கடை பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக உள்ள தண்டவாளப் பகுதியில் ரயிலின் முன் பாய்ந்து இளைஞன் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்நபர் 02-08-2013 இரவு 10 மணியளவில் கொழும்பிலிருந்து புத்தளம் நோக்கி பயணித்த ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவ்வாறு உயிரிழந்த இளைஞன் தங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதானவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

இவரது சடலம் மீதான பிரேத பரிசோதனை நேற்று முன்தினம் (02) நீர்கொழும்பு வைத்தியசாலையில் இடம்பெற்றது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொச்சிக்கடை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : | |
Proudly powered by Kesavan
Copyright © 2014. Tamil News tamildiscovery Jaffna news Yarl news - All Rights Reserved
Original Design by Tamilcinema4u@hotmail.com