பரீட்சார்த்த ரயிலில் மோதுண்டு கிளிநொச்சியில் வயோதிபர் மரணம்! - Tamil News tamildiscovery Jaffna news Yarl news
Headlines News :
Home » » பரீட்சார்த்த ரயிலில் மோதுண்டு கிளிநொச்சியில் வயோதிபர் மரணம்!

பரீட்சார்த்த ரயிலில் மோதுண்டு கிளிநொச்சியில் வயோதிபர் மரணம்!

Written By NIsha on Friday, September 13, 2013 | 1:08 AM

கிளிநொச்சியில் இன்று வெள்ளிக்கிழமை காலை ரயிலில் மோதுண்டு வயோதிபர் ஒருவர் மரணமடைந்துள்ளார்.

கிளிநொச்சி நகருக்கு அண்மையில் உள்ள தொண்டமான் நகர் 55 ஆம் கட்டையிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

தொண்டமான் நகரை சேர்ந்த வைரமுத்து திருநாவுகரசு(வயது 78) என்பவரே மரணமடைந்துள்ளார்.

சைக்கிளில் பயணித்த அவர் பாதுகாப்பற்ற ரயில் கடவையை கடக்க முயன்ற போதே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

இன்று வெள்ளிக்கிழமையும் மேற்கொள்ளப்பட்ட பரீட்சார்த்த ரயிலேயே அவர் மோதுண்டு மரணமடைந்துள்ளார்.

கிளிநொச்சிக்கான ரயில் சேவைகள் உத்தியோகபூர்வமாக நாளை சனிக்கிழமை ஆரம்பித்து வைக்கப்படவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும். யாழ்தேவி-புகையிரதம்-யாழ்ப்பாணம்-கிளிநொச்சி-கொழும்பு




Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : | |
Proudly powered by Kesavan
Copyright © 2014. Tamil News tamildiscovery Jaffna news Yarl news - All Rights Reserved
Original Design by Tamilcinema4u@hotmail.com