மீண்டும் வருவேன்: ஸ்ரீசாந்த்தின் சூளுரை! - Tamil News tamildiscovery Jaffna news Yarl news
Headlines News :
Home » » மீண்டும் வருவேன்: ஸ்ரீசாந்த்தின் சூளுரை!

மீண்டும் வருவேன்: ஸ்ரீசாந்த்தின் சூளுரை!

Written By NIsha on Saturday, September 14, 2013 | 8:05 AM

ஐபிஎல் கிரிக்கெட் அணியான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய ஸ்ரீசாந்த் சூதாட்டத்தில் ஈடுபட்டதால் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அவருக்கு ஆயுட்கால தடை விதித்துள்ளது.

இந்தத் தடையை தனக்கு நேர்ந்த "மிகப்பெரிய பின்னடைவு" என்று வர்ணித்த ஸ்ரீசாந்த் நிரபராதி என்று நிரூபித்து மீண்டும் கிரிக்கெட் உலகிற்குள் வருவேன் என்று சூளுரைத்துள்ளார்.

"இந்த நெருக்கடியிலிருந்து மீண்டு பலமாக திரும்புவேன். நான் மீண்டும் கூறுகிறேன் நான் எந்தத் தவறும் செய்யவில்லை. எனக்கு இப்போது ஒரே ஆறுதல் நான் வீட்டிலிருக்கிறேன், நல்லவேளையாக சிறையில் இல்லை" என்று கூறியுள்ளார் ஸ்ரீசாந்த்.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : | |
Proudly powered by Kesavan
Copyright © 2014. Tamil News tamildiscovery Jaffna news Yarl news - All Rights Reserved
Original Design by Tamilcinema4u@hotmail.com