கணவனுக்கு மனநலம் பாதிப்பு: மகளுக்கு விஷம் கொடுத்து கொன்று தாயும் தற்கொலை! - Tamil News tamildiscovery Jaffna news Yarl news
Headlines News :
Home » » கணவனுக்கு மனநலம் பாதிப்பு: மகளுக்கு விஷம் கொடுத்து கொன்று தாயும் தற்கொலை!

கணவனுக்கு மனநலம் பாதிப்பு: மகளுக்கு விஷம் கொடுத்து கொன்று தாயும் தற்கொலை!

Written By NIsha on Tuesday, September 17, 2013 | 9:00 PM

கன்னியாகுமரி மாவட்டத்தில் கணவனுக்கு மனநலம் பாதிக்கப்பட்டதன் காரணமாக மனமுடைந்த பெண், மகளுக்கு விஷம் கொடுத்துக் கொன்று தானும் தற்கொலை செய்து கொண்டார்.

தக்கலையை அடுத்த கொற்றியோடு, நெக்கட்டான் பாறை பகுதியை சேர்ந்தவர் பிரசாத் (வயது 40). விவசாயி.

இவரது மனைவி ராதா (35). இவர்களுக்கு கணேசன் (17) என்ற மகனும், பவித்திரா (16) என்ற மகளும் இருந்தனர். மகன் பிளஸ்-2வும், மகள் பிளஸ்-1 ஆம் படித்து வந்தனர். பிரசாத் அந்த பகுதியில் வாழை மரம் பயிரிட்டு விவசாயம் செய்து வந்தார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரசாத்துக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதற்காக அவர் பல இடங்களிலும் சிகிச்சை பெற்றார். என்றாலும் நோய் குணமாகவில்லை. மாறாக பிரசாத்தின் மன நிலையில் பாதிப்பு ஏற்பட்டது.

அதன் பின்பு அவர் விவசாய பணிகளை பார்க்காமல் எப்போதும் தனியாகவே வீட்டில் புலம்பிக் கொண்டிருந்தார்.

இது அவரது மனைவி ராதாவுக்கு பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தியது. கடந்த சில நாட்களாகவே அவர் வீட்டில் யாருடனும் பேசாமல் தனியாக இருந்தார். நேற்று மாலையில் வீட்டில் இருந்த பிரசாத் திடீரென வீட்டை விட்டு வெளியே சென்றார். அவரை மனைவி ராதா தடுத்து பார்த்தார். ஆனால் அவர் யார் பேச்சையும் கேட்காமல் வெளியே சென்றார்.

ஏற்கனவே மன உளைச்சலில் இருந்த ராதா இதனால் மேலும் பாதிப்புக்கு ஆளானார். அந்த நேரத்தில் வீட்டில் ராதாவின் மகள் பவித்திரா மட்டுமே இருந்தார்.

அவரை அழைத்துக்கொண்டு வீட்டின் சமையலறைக்கு சென்ற ராதா, அங்கு பயிர்களுக்கு போட வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்து மகளுக்கு கொடுத்தார். அதை தின்றதும் பவித்திரா மயங்கி விழுந்தார். பின்னர் ராதாவும் அதே மருந்தை தானும் அருந்தினார்.

இருவரும் வீட்டின் சமையலறையில் கிடந்தது அக்கம் பக்கத்தாருக்கு இரவு வரை தெரியவில்லை. பிரசாத்தின் மகன் கணேசன் இரவில் வீட்டிற்கு வந்த போதுதான் வீட்டின் சமையலறையில் தாயும், தங்கையும் வாயில் நுரை தள்ளியபடி கிடப்பதை கண்டார்.

உடனே அவர் அக்கம் பக்கத்தார் உதவியுடன் அவர்களை தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர் இருவரும் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : | |
Proudly powered by Kesavan
Copyright © 2014. Tamil News tamildiscovery Jaffna news Yarl news - All Rights Reserved
Original Design by Tamilcinema4u@hotmail.com