மம்மூத் மீண்டும் உருவாகலாம்: 'ஸ்டெல்செல்' கள் மூலம் சாத்தியம்! - Tamil News tamildiscovery Jaffna news Yarl news
Headlines News :
Home » » மம்மூத் மீண்டும் உருவாகலாம்: 'ஸ்டெல்செல்' கள் மூலம் சாத்தியம்!

மம்மூத் மீண்டும் உருவாகலாம்: 'ஸ்டெல்செல்' கள் மூலம் சாத்தியம்!

Written By NIsha on Thursday, August 1, 2013 | 7:24 AM

பல்லாண்டுகளுக்கு முன்பு ‘மம்மூத்’ என்ற யானை இனம் இருந்தது. அவை நீண்ட தந்தங்கள் மற்றும் உடலில் அடர்ந்த ரோமங்களுடன் கூடியது.

மேலும் மம்மூத் தற்போதுள்ள யானைகளை விட உருவத்தில் மிகப் பெரியவைகளாக இருந்தன.

இயற்கையின் பல்வேறு மாற்றங்களால் அந்த யானை இனம் படிப்படியாக அழிந்து விட்டது. அந்த யானை இனத்தை மீண்டும் உருவாக்குவதில் விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

எடின்பர்க்கை சேர்ந்த விஞ்ஞானி வில்முட் தலைமையிலான குழுவினர் கடந்த 1996–ம் ஆண்டில் ‘டோலி’ என்ற ஆட்டு குட்டியை ‘குளோனிங்’ முறையில் உருவாக்கினர். அது ‘ஸ்டெம்செல்’கள் மூலம் உருவாக்கப்பட்டது.

அதே முறையில் மீண்டும் மம்மூத் யானை இனத்தை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. தற்போதுள்ள குளோனிங் முறையை விட அதிநவீன தொழில் நுட்பத்துடன் திசு செல்களை ‘ஸ்டெல்செல்’ களாக மாற்றி தீவிர நடவடிக்கைகள் எடுக்கபட்டு வருகிறது.

இந்த தகவலை ‘டோலி’ ஆட்டை குளோனிங் முறையில் உருவாக்கிய விஞ்ஞானி வில்முட் இணைய தளத்தில் வெளியிட்டுள்ள ஒரு ஆய்வு கட்டுரையில் தெரிவித்துள்ளார்.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : | |
Proudly powered by Kesavan
Copyright © 2014. Tamil News tamildiscovery Jaffna news Yarl news - All Rights Reserved
Original Design by Tamilcinema4u@hotmail.com