பாகிஸ்தானில் குடும்ப கெளரவத்துக்காக மூன்று பெண்கள் சுட்டுக் கொலை! - Tamil News tamildiscovery Jaffna news Yarl news
Headlines News :
Home » » பாகிஸ்தானில் குடும்ப கெளரவத்துக்காக மூன்று பெண்கள் சுட்டுக் கொலை!

பாகிஸ்தானில் குடும்ப கெளரவத்துக்காக மூன்று பெண்கள் சுட்டுக் கொலை!

Written By NIsha on Wednesday, September 18, 2013 | 6:26 AM

வடமேற்கு பாகிஸ்தானில் குடும்ப கெளரத்துக்காக 3 பெண்கள் அவர்களது உறவினர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

அந்தப் பெண்களில் ஒருவர் தனது கணவரை விட்டு பிரிந்து சென்றதைத் தொடர்ந்தே இந்தப் படுகொலைகள் இடம்பெற்றுள்ளன.

மேற்ப்படி பெண்களில் ஒருவரான கராச்சியைச் சேர்ந்த 22 வயது பெண் இரு வருடங்களுக்கு முன் கடைக்காரர் ஒருவரை திருமணம் செய்திருந்தார்.

இந்த நிலையில் அவர் தனது கணவரை விட்டுப் பிரிந்து சென்று வட மேற்கு பள்ளத்தாக்கைச் சேர்ந்த பிறிதரு நபரை திருமணம் செய்துள்ளார். அந்த நபரைத் திருமணம் செய்வதற்கு பெண்ணின் அத்தையும், மைத்துனியும் உதவி உள்ளனர்.

இந்தநிலையில் இந்த விடையத்தை அறிந்த வடமேற்கு பாகிஸ்த்தானிய உள்ளூர் பெரியவர்கள் மேற்ப்படி பெண்ணும் அவருக்கு உதவிய இரு பெண்களும் கொல்ளப்பட வேண்டும் என ஞாயிற்றுக்கிழமை தீர்ப்பளித்துள்ளனர்.

இதனையடுத்து இரவு தமது வீட்டில் வைத்து அவர்களது உறவினர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட அந்த 3 பெண்களினதும் உடல்கள் திங்கட்க்கிழமை நல்லடக்கம் செய்யப்பட்டது.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : | |
Proudly powered by Kesavan
Copyright © 2014. Tamil News tamildiscovery Jaffna news Yarl news - All Rights Reserved
Original Design by Tamilcinema4u@hotmail.com