முன்னாள் புலி உறுப்பினர் பதுமன் விடுதலை! - Tamil News tamildiscovery Jaffna news Yarl news
Headlines News :
Home » » முன்னாள் புலி உறுப்பினர் பதுமன் விடுதலை!

முன்னாள் புலி உறுப்பினர் பதுமன் விடுதலை!

Written By NIsha on Wednesday, September 18, 2013 | 6:04 AM

விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினரான பதுமன் என்றழைக்கப்படும் சிவசுப்ரமணியம் வரதநாதன் அவர் மீது சுமத்தப்பட்டுள்ள அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும், நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

திருகோணமலை மேல் நீதிமன்றத்தில் இன்றைய தினம்  ஆஜர்படுத்தியபோதே,  அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

புலிகள் இயக்கத்தின் திருகோணமலை மாவட்டத்தின் முன்னாள் கட்டளைத் தளபதியாக இருந்த பதுமன் 2009 ஆம் ஆண்டு இராணுவத்திடம் சரணடைந்திருந்தார்.

இந்நிலையில் இவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை நிரூபிப்பதற்கு போதுமான ஆதாரங்கள் இல்லையெனக் கூறி நீதிமன்றம் இவரை விடுதலை செய்துள்ளது.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : | |
Proudly powered by Kesavan
Copyright © 2014. Tamil News tamildiscovery Jaffna news Yarl news - All Rights Reserved
Original Design by Tamilcinema4u@hotmail.com